கோவை காந்திபுரத்தில் இருந்து ஒருவர் இருசக்கர வாக னத்தில் புறப்பட்டு புலியகுளம் வந்து சேர ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு 20 நிமிடம் ஆகும் என்றால், புலியகுளம் விநாயகர் கோவிலில் இருந்து மீனா எஸ் டேட் வரையில் 500 மீட்டர் தூரம் கடந்து செல்ல குறைந்த பட்சம் 30 நிமிடம் கட்டாயம் ஆகும் என் கிற நிலைதான். ஆமை வேகத் தில் செல்வதற்கே விவேகம் வேண்டும் என்கிற அளவிற்கு சீரழிந்து சின்னாபின்னமாகிக் கிடக்கிறது புலியகுளம் டூ சௌரி யபாளையம் சாலை. ஆசியாவின் மிகப்பெரிய விநாயகர் சிலை உள்ள பகுதி புலி யகுளம் பகுதி. விநயாகர் சிலை யின் நேர் எதிரே உள்ள சாலை சௌரியபாளையம் சாலை. உப்பிலியபாளையத்தில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனை, மீனா எஸ்டேட் பகுதியில் உள்ள கேந்திரிய வித்யாலா பள்ளி மற் றும் அரசுப்பள்ளி, உடையாம்பா ளையம், பெரியார் நகர், ஏரிமேடு, உப்பிலியபாளையம், சௌரிய பாளையம், வரதராஜபுரம் என மக்கள் அடர்த்தியாக வாழும் பகு திக்கு இந்த சாலையே பிரதான சாலையாகும். மேலும், திருச்சி சாலை, அவிநாசி சாலைக்கு செல்ல இணைப்பு சாலையா கவும் இச்சாலை உள்ளது. இச் சாலையில், தினசரி பல்லாயி ரக்கணக்கானோர் இருசக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாக னங்களில் பயணித்து வருகின்ற னர்.
மாநகரத்தின் மொத்த சாலை யும் மோசம் என்கிற நிலையில், இந்த சௌரியபாளையம் சாலை மிக மோசம் என்கிற நிலைதான் உள்ளது. கடந்த சில மாதங்க ளுக்கு முன்பு சூயஸ் நிறுவனத் தின் குடிநீர் இணைப்பிற்காக குழாய் பதிப்பதற்காக இந்த சாலை முழுமையாக தோண்டப் பட்டது. பணிகள் முடிவுற்று ஆறு மாதங்களாகியும் இன்னமும் புதிய சாலை அமைக்கப்படா ததால், இச்சாலையில் செல்பவர் களுக்கு தங்க பதக்கமே கொடுக் கலாம் என்கிற வகையில் சாகசம் செய்தே செல்ல வேண்டிய நிலை உள்ளது. நாள்தோறும் சின்னசின்ன விபத்துகள் நடை பெறும் சாலை என்பதால் எந்நேர மும் அச்சத்துடனே மக்கள் பய ணிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளி மற்றும் வேலைக்கு செல்லும் நேரம், திரும்பும் நேரங்களில் வாகன ஓட்டிகள் ஊர்ந்தே செல்ல வேண்டிய நிலை உள்ளது. எதிர்புறம் ஒரு பேருந்தோ, லாரியோ வந்தால், குறைந்தது ஒரு மணிநேரமாவது போக்குவ ரத்து நெரிசலில் வாகனங்கள் சிக்கி தவிக்க வேண்டிய நிலை யில் உள்ளது. மழைக்காலங்க ளில் சொல்ல வேண்டியதே இல்லை. தவறி விழுந்தவர்கள் தூக்கி விடுவதற்கென்றே சில தன்னார்வலர்கள் குழு அமைத்து கண்காணிப்பு மேற்கொண்டார் கள் என்பது மாநகராட்சியின் செவிகளுக்கு எட்டியதா என தெரி யவில்லை.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த சாலையை தோண்டிப்போட்டு ஆறு மாசமாச்சு. டெய்லியும் ஆக் சிடென்ட் ஆகுது. உசுரு போக றதில்லைன்னாலும்,அடிபட்டு காயத்தோட போறத பார்த்தா பாவமா இருக்குங்க. இரண்டு மாசத்துக்கு முன்னாள கம்யூ னிஸ்ட்காரங்க புதுசாரோடு போட னும்னு மறியல் போராட்டத்த அறிவிச்சாங்க. தட்டிபோர்டெல் லாம் வச்சு எங்ககிட்ட கையெழுத் தெல்லாம் வாங்கினாங்க. அடுத்த நாளே அதிகாரிகள், போலீசெல் லாம் இங்க வந்து உடனடியாக சாலையை போடுறோம். மறியல் போராட்டம் செய்யாதீங்கன்னு, அவசர அவசரமா ஜல்லி கல்லு எல்லாம் போட்டு ரெப்பிட்டு போனாங்க. இதப்போட்டுட்டு போயும் ஒரு மாசமாச்சு ரோடு போட்ட வழிய காணோம் என்ற னர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் புலியகுளம் செயலா ளர் டெம்போ நாகராஜ் கூறுகை யில், கடந்த ஐந்து மாதங்களாக இந்த சாலையை புதுப்பித்துக் கொடுக்கக்கோரி, பொது மக்களி டம் கையெழுத்தை பெற்று மாந கராட்சி மேயர், ஆணையர் என அதிகாரிகளிடம் கொடுத்துவிட் டோம். நாளை சாலையை போட்டு விடுவோம் என்கின்றனர்.
எப் போது போனாலும் நாளை சாலை போடுவோம் என்கிற வார்த் தையை மாற்றி பேசுவதே இல்லை. மறியல் போராட்டத்தை அறிவித்தபிறகு அதிகாரிகள், காவல்துறையினர் வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் சாலை போடுவதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை செய்தனர். நாங்களும் சாலை அமைத்துவிடு வார்கள் என்று நினைத்தோம். அதுவும் ஒரு மாதம் கடந்து விட்டது. ஆகவே இப்போது ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கி றோம். இந்த ஆர்ப்பாட்டத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாதன், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் யு.கே.சிவஞானம், கே.மனோகரன், கே.அஜய்கு மார், மாவட்டக்குழு உறுப்பினர் என்.ஜாகிர், கிழக்கு நகரச் செயலாளர் என்.செல்வராஜ், மாதர் சங்க மாவட்டச் செயலா ளர் சுதா உள்ளிட்ட தலைவர் கள் பங்கேற்றுள்ளனர். உடனடியாக மாநகராட்சி புதிய சாலை அமைக்கவில்லை யென்றால், மக்களை திரட்டி மறி யல் போராட்டத்தில் ஈடுபடுவ தைத்தவிர வேறு வழியில்லை என்றார். இதுகுறித்து, மாநகராட்சி பொறியாளரிடம் கேட்டபோது, சூயஸ் குடிநீர் திட்டத்திற்காக குழி கள் தோண்டப்பட்டு இருந்த நிலை யில், அதற்கான பணிகள் அனைத் தும் முடிந்து விட்டது. விரைவில் சாலையை சீரமைக்கும் பணிகள் தொடங்கி விடுவோம் என்றார்.
- கார்த்திக் மதிவாணன்